கிராமச் சாலைகளில் வளர்ந்த சீமை கருவேலத்தை அகற்ற வேண்டும்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளில் பல கிராம சாலைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் எதிரில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு முள் மரங்களின் தாக்கம் உள்ளது.
100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலம் கிராம ஊராட்சிகளின் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள முள் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். பிரதான சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் பெயரளவிற்கு மட்டுமே பணிகள் நடக்கிறது. காலை 8:30 முதல் மதியம் 1:45 மணி வரை பணிகளுக்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்ய வேண்டிய அலுவலர்கள் மற்றும் தனி அலுவலர்கள் கண்டும் காணாமலும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் முள்மரங்களை அகற்றக் கூறினாலும், கடந்து செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.
எனவே மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு வரக்கூடிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு உரிய முறையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான வழிக்காட்டுதலை யூனியன் அலுவலர்கள் வழங்க வேண்டும் என்றனர்.