Arts, culture, entertainment and media
டாஸ்மாக் மது விற்ற இரண்டு பேர் கைது
ஈரோடு:ஈரோடு சின்னமுத்து மெயின் வீதி இடையன்காட்டு வலசு பகுதியில், ஈரோடு மது
போலீசார் ரோந்து சென்றனர். அங்கு டாஸ்மாக் மது விற்பனையில்
ஈடுபட்டிருந்த பெரியசேமூர் ஈ.பி.பி.நகர் சுகுமாரை, 32, கைது செய்து,
16 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சோளிபாளையம் பிரிவு அருகே, சூரம்பட்டி கருப்பண்ண சுவாமி கோவில்
இரண்டாவது வீதியை சேர்ந்த குருசாமி, 64, என்பவரிடம், 27 டாஸ்மாக் மது
பாட்டில்களை பறிமுதல் செய்து, அறச்சலுார் போலீசார் கைது செய்தனர்.