Politics
தினமலர் செய்தி எதிரொலி: நெல் கொள்முதல் நிலையம் மேல்பேரமநல்லுாரில் திறப்பு
காஞ்சிபுரம்:நம் நாளிதழில் வெளியான செய்தி காஞ்சிபுரம் அருகே, மேல்பேரமநல்லுார் கிராமத்தில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இப்பகுதியில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை இடைத்தரகர்களின் தலையீடின்றி, அரசு நிர்ணயித்துள்ள ஆதரவு விலைக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மேல்பேரமநல்லூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.