மாநில நல்லாசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் தேர்வு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், எட்டு ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தினத்தையொட்டி, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், இந்தாண்டு விருதுக்கு, 22 பேர்
விண்ணப்பித்திருந்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் மாதவன்
தலைமையிலான தேர்வுக்குழு மதிப்பீடு செய்து, அதில், 16 பேரை தேர்வு
செய்து, கல்வி கமிஷனருக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களில், 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்கள்,
நேற்று வெளியிடப்பட்டன.
நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று நடக்கும் விருது வழங்கும் விழாவுக்கு,
பள்ளிக்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்திரமோகன்
தலைமை வகிக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தேர்வு
செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார். அதற்காக,
நேற்று நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, 8
ஆசிரியர்களும் சென்னை சென்றனர்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு:
தலைமையாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாமக்கல்;
அரங்கநாயகி தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி
இறையமங்கலம்; ரகோத்தமன், முதுகலை ஆசிரியர், செங்குந்தர் மகாஜன அரசு
உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, குருசாமிபாளையம்; சந்திரசேகரன்,
பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி நத்துக்குழிப்பட்டி,
கொல்லிமலை; குமரேசன், பட்டதாரி ஆசிரியர், பஞ்., நடுநிலைப்பள்ளி
ஜங்கமநாயக்கன்பட்டி, பரமத்தி ஒன்றியம்; நல்லமுத்து, இடைநிலை
ஆசிரியர், பஞ்., தொடக்கப்பள்ளி மலைப்பட்டி, எருமப்பட்டி ஒன்றியம்;
செல்வி, தலைமையாசிரியர், பஞ்., தொடக்கப்பள்ளி வெள்ளபிள்ளையார்
கோவில், வெண்ணந்தூர் ஒன்றியம்; மணிமேகலா, இடைநிலை ஆசிரியர், நகராட்சி
நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி குமாரபாளையம்.
