Politics
20 லட்சம் சதுர அடி பரப்பளவு… ரூ. 1,200 கோடி மதிப்பு! புதிய தலைமைச் செயலகம் - அரசாணை வெளியீடு

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையையொட்டி புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் நிலையில் 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில் புதிய தலைமைச் செயலகத்துக்காக சென்னையின் முக்கியமான பகுதிகளில் 4 இடங்களை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகின. அதில் குறிப்பாக பட்டினப்பாக்கம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைய இருக்கிறது. புதிய தலைமைச் செயலக திட்டத்தை செயல்படுத்தி 3 தனித்தனி குழுக்களை அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)