Crime, law and justice
கழிவறையில் வழுக்கி விழுந்த மாமியார்.. கழுத்தில் மிதித்தே கொன்ற மருமகள்.. விசாரணையில் திடுக்!

செங்கல்பட்டில் மாமியாரின் கழுத்தில் மிதித்து துடிதுடித்து கொலை செய்து, நாடகமாடிய மருமகள் போலீசில் சிக்கினார்.
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், மாமியார் பெருந்தேவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திருமணமான நாள் முதலே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கணவன் - மனைவி இடையே ஏற்படும் அடிக்கடி சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் என இந்துஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்துஜா மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரது கழுத்தில் மிதித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். தொடர்ந்து எதுவுமே தெரியாதது போல் கண்ணீர் விட்டு கதறியவர் மாமியார் கழிவறையில் தவறி விழுந்து மூச்சுத்திணறலால் மயங்கிவிட்டதாகக் கூறி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
