Crime, law and justice
லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!

லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு மோதி பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலியான சோகம்
மதுரை சோழவந்தான் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியிலிருந்து விழுந்த இரும்பு ராடு, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது விழுந்ததில் அவர்கள் பலியாகினர்.
இணைபிரியா நண்பர்கள் விபத்தில் சிக்கி இறந்ததால், அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில், பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நெருங்கிய இணை பிரியா நண்பர்கள். சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நகரி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்றிலிருந்து திடீரெனப் விழுந்த இரும்பு ராடு இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணைபிரியா நண்பர்களான ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் ஒரே நேரத்தில் விபத்தில் உயிரிழந்த சம்பவம், சித்தாலங்குடி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.