போக்குவரத்து விதிமீறல்: ஓராண்டில் 95,568 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட, 95,568 பேரின் ஓட்டுநர் உரிமம், 'சஸ் பெண்ட்' செய்யப்பட்டுள்ள தாக, போக்குவரத்து ஆணை யரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து விதிமீறல்களுக்கு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும், 95,568 ஓட்டுநர் உரிமங்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.




