வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,
சுரேஷ், திண்டிவனம்.
திருமண பத்திரிக்கையில் நிகழும் மங்களகரமான பராப வருடம் என்று போடுகிறார்களா, இந்த மங்களகரமான என்பது சரியான சொல்லா விளக்கம் தாருங்கள்.
இது தவறாக அழைக்கப்படுகிறது மங்கலம் என்பதுதான் சரியான சொல். மங்கலம் என்றால் செழிப்பு புனிதம் சுபிட்சம் தூய்மை சிறப்பு மற்றும் நல்வாழ்வு என்று பெயர் மங்கல நாண் என்றால் தாலி என்று பெயர் மங்களம் என்பது மங்கலத்தின் போலிச் சொல் மங்களம் பாடினார். இசை கச்சேரியில் மங்களம் பாடினார். கதாகாலட்சேபத்தில் என்றால் கச்சேரி முடிந்துவிட்டது என்று பொருள். இது இப்படி இருக்க திருமண பத்திரிக்கையில் மங்களம் என்று ஆரம்பிக்கவேண்டும். திருமண வாழ்வு ஆரம்பிக்கவே இல்லை எப்படி மங்களம் பாடி முடிக்க முடியும். இது தவறுதலாக அழைக்கப்படுகிறது. எனவே மங்கலம் என்று பத்திரிக்கையில் அச்சடிப்பது தான் மிகவும் சரியான சொல் ஆனால் காலம் காலமாக மங்களம் என்றஇதே சொல்லை போட்டு பழக்கப்படுத்திவிட்டார்கள்.மொழி என்பது புரிந்து கொள்ளத்தானே என்று பழக்க தோஷத்தால் அச்சடித்த வருகிறார்கள். ஒருசில பேர் சரியாக அச்சடிக்கின்றனர் இது மிகக் குறைவு.மங்களம் என்று வந்துவிட்டது திருவள்ளுவர் மங்கலம் என்பனை மாட்சி மற்றும் அதன் நன்கலம் நன்மக்கள் பெயர் என்று எழுதுகிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)