இலங்கை பெண் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை, திருமங்கலம் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த, 68 வயது பெண் வீட்டில், அமலாக் கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இலங்கையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி, 68. இவர், தன் குடும்பத்தினருடன், 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தார்.
தற்போது, சென்னை, திருமங்கலத்தில், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வருகிறார். இவரது கணவர், கடந்தாண்டு இலங்கைக்கு சென்று விட்டார் .




