பிரதமர் மோடிக்கு நிகராக இந்தியாவில் யாருமே கிடையாது சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
சிவகாசி: ''பிரதமர் மோடிக்கு நிகராக இந்தியாவில் யாருமே கிடையாது '', என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்தங்கலில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., -தி.மு.க., - த.வெ.க., ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா ஆட்சிகளிலும் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். தவறான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமாக சென்ற திராவிட ஆட்சி காலத்தில் ஊழல் நடந்துள்ளதாக சொல்வது ஏற்புடையதல்ல. தற்போதும் ஆங்காங்கே தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அளவில் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

