நெல்லை மேயர் மீதான புகாரில் முன்னாள் மனைவி திடீர் பல்டி
திருநெல்வேலி: திருநெல்வேலி தி.மு.க., மேயர் ராமகிருஷ்ணன், 58, என்பவரின் முன்னாள் மனைவி சாந்தி, 50, தன் மாஜி கணவர் மீது புகார் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரே அதை மறுத்து புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு, மனநலம் பாதித்த, 26 வயது மகன் உள்ளார். சாந்தி, தன் பெற்றோருடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வசிக்கிறார்.
ராமகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த செவிலியர் ஒருவரை, சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். செவிலியரின் மகளுக்கு சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.




