தாராபுரம் இடைத்தோ்தல்: ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல்
தாராபுரம் இடைத்தோ்தலில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 போ் சுயேச்சை வேட்பாளா்கள் ஆவா்.
திமுக வேட்பாளா் செள.சுகன்யா 4 வேட்பு மனுக்கள், திமுக மாற்று வேட்பாளா் ஒரு வேட்பு மனு என 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவா்களில் சத்தியபாமா என்ற சுயேச்சை வேட்பாளா் பெயா், தவெக வேட்பாளா் பெயரில் அமைந்துள்ளது. அதேபோல அதிமுக வேட்பாளா் பானுமதி போல பானுப்பிரியா என்பவரும் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.


