ஏற்காட்டில் இரவு முழுவதும் கனமழை! மலைப்பாதையில் நிலச்சரிவு!!
ஏற்காட்டில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் மலைப்பாதையில் நிலச்சரிவு, பாறை விழுந்து பாதிப்பு.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முழுவதும் கொட்டிய கனமழை காரணமாக மலைப்பாதையில் 2 இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்தது.


