போர் துயரத்துக்கு சாட்சியான 300 காதல் கடிதங்கள்!
அந்தக் கடிதங்களை எழுதியவர் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லூயிஸ் வெப்பர். குடும்பத்தினர் அவரைச் செல்லமாக ‘ஸ்பீடி’ (Speedy) என்று அழைத்தனர்.
2022-ம் ஆண்டின் ஓர் அமைதியான மதியப் பொழுது. நியூயார்க்கிலுள்ள ராணுவ வீரர்களுக்கான சேவை அமைப்பான USO அலுவலக வாசலில், முகவரியோ, அனுப்பியவர் பெயரோ இல்லாத ஒரு அட்டைப்பெட்டி அநாதையாகக் கிடந்தது. பெட்டியைத் திறந்தபோது, உள்ளே காலத்தால் பழுப்பேறிய 300-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அடர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
அந்தக் கடிதங்களை எழுதியவர் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லூயிஸ் வெப்பர். குடும்பத்தினர் அவரைச் செல்லமாக ‘ஸ்பீடி’ (Speedy) என்று அழைத்தனர். அவர் தன் மனைவி ஃபிரான்சஸுக்கு எழுதிய கடிதங்கள் அவை. திருமணமாகி சில மாதங்களிலேயே, இரண்டாம் உலகப் போர் அவர்களைப் பிரித்தது. 1942, ஜூன் 9-ம் தேதி ராணுவத்தில் சேர்ந்த ஸ்பீடி, பின்னர் அட்லான்டிக் கடலுக்கு அப்பால் போர்ப்பணிக்கு அனுப்பப்பட்டார்.

