பாரம்பர்ய அரிசி ரகங்கள், சிறுதானியங்களில் செட்டிநாட்டுப் பலகாரங்கள்...
ஆரம்பத்தில் நண்பர்கள் சொன்னாங்கனு பலகாரங்கள் தயாரிக்க நவீன மிஷின்களை லட்சக்கணக்கில் செலவு பண்ணி வாங்கிட் டோம்.
அசத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!
செட்டிநாட்டுப் பலகாரங்கள், பல தலைமுறைகள் கடந்த பாரம்பர்ய பெருமைகொண்டவை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் செட்டிநாட்டுப் பலகாரங்களில் பாரம்பர்ய சுவை அரிதாகிவிட்டது. காரணம், நவீனரக அரிசியின் பயன்பாடுதான். இந்த நிலையில், நாட்டு அரிசி ரகங்கள் மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி... பாரம்பர்ய சுவை மாறாமல் செட்டிநாட்டுப் பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது, ‘கிரானிஸ் செட்டி நாட்டுப் பலகாரக் கடை'. இந்தக் கடை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகிலுள்ள மேலைச் சிவபுரியில் இருக்கிறது. ஒரு பகல் பொழுதில் இந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மண்பானைத் தண்ணீர் கொடுத்து, புன்னகை யுடன் வரவேற்றார், உரிமையாளர் கணேஷ் சோலை.
மனைவியின் யோசனை!


