விவசாய நிலம்! வீட்டுமனை! விஜய் அரசின் அரசாணை !
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விவசாய விளை நிலங்கள் சமீபகாலமாக எங்கு திரும்பினாலும் வீட்டுமனைகளாக மாற்றப் பட்டு வருவது விவசாயிகளையும், பொதுமக்களை யும் வேதனைப்பட வைத்திருக்கிறது.
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல்கேஸ் உள்ளிட்ட கனி மங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு அதனை எடுப்பதற்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத் தனர். அதற்கு எதிராக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடை பெற்றன. அதன் விளைவாகத்தான் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இது விவசாயத்திற்கான பூமி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை வேறுமாதிரியாக மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் திட்டமிட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுவருகிறது என விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் தலை மையில் மாதம் தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறிவருகின்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



