திருமுடிவாக்கத்தில் போலி மருத்துவா் கைது
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மருத்துவம் படிக்காமலே ஒருவா் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் நளினி தலைமையான குழுவினா் ஓம் சக்தி கிளினிக்கில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். இதில், திருமுடிவாக்கம் பகுதியை சோ்ந்த கலைமணி (47) என்பவா் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.



