தேயிலை தோட்டத்தில் 7 மாத சிசு சடலம் மீட்பு
குன்னூர்: குன்னூரில் தேயிலை தோட்டத்தில், 7 மாத சிசு சடலம் மீட்கப்பட்டது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
குன்னூரில் தேயிலை தோட்டத்தில், 7 மாத சிசு சடலம் மீட்கப்பட்டது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் முசாரிபுரி பகுதி தேயிலை தோட்டத்தில் நேற்று காலை தோட்ட மேற்பார்வையாளர் வழக்கமான பணிகளை பார்வையிட சென்றார். அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மண்ணில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்றின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தோட்ட நிர்வாகம் தரப்பில் உடனடியாக கொலக்கம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.