“டெல்டா பகுதியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி இல்லை!”
டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடையும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதி அடைந்த விவசாயிகள்!
`டெல்டா பகுதியில் மணல் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக் கூடாது' என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ராய முண்டான்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் நலச் செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமாகவும் விளங்கு கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பிற பகுதி களுக்கு மணல் அனுப்பப்பட்டு வருகிறது. திருவையாறு தாலுகாவில் உள்ள அச்சனூர், மருவூர், கடுவெளி, மணத் திட்டை, பூதலூர் தாலுகாவில் உள்ள மாரனேரி, புத்தூர், புதுக்கரி வாரம்பாடை, கழமங்கலம், ஒரத்தூர், விண்ணமங்கலம், கல்வடி, பெரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களின் ஆறுகளில் பல சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால், இந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், ஆற்றுநீரின் போக்கும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, டெல்டா பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையும் மேற் கொள்ளக் கூடாது என உத்தர விட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.




