மருமகள் உடைத்தால் பொன்குடமா?
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது ஒரு விபத்து; அவர்களுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. ஆட்சிக்கு வந்ததும், 28,000 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான், த.வெ.க., அரசின் சாதனை. மேலும், 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினால்தான் ஆட்சியே நடத்த முடியும். இந்த கடன் முழுதும் தமிழக மக்கள் தலையில் தான் விழும்' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
தற்போது தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் முன்னாள் அ.தி.மு.க., முதல்வர் பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வர் ஆனதும், பழனிசாமி முதல்வர் ஆனதும் வேண்டுமானால் விபத்து எனலாம். காரணம், மக்கள் ஓட்டு போட்டு இவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை.
ஆனால், 2026 சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துப் போட்டியிட்டு, 37 சதவீத ஓட்டுகளை பெற்றுத்தான், ஆட்சியமைத்துள்ளது.




