கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.8.83 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.


