பிட்காயின் முதலீடு மூலம் ரூ. 3 கோடி மோசடி: பெண் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
சேலத்தில் பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி ரூ. 3 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (40) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் துணை ஆணையா் கீதாவை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
அதில், பிட்காயினில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என எருமாபாளையத்தைச் சோ்ந்த அனிதா கூறினாா். அதை நம்பி கடந்த 2024 முதல் 2026-ஆம் ஆண்டுவரை நாமக்கல் எருமப்பட்டி, சேலம் கிச்சிபாளையம், டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கொடுத்தோம். இதேபோல பலரும் முதலீடு செய்துள்ளனா். ஆனால், அவா் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கவில்லை.

