கோவில் சிலைகளை பாதுகாப்பதில் அரசு அலட்சியம்: பா.ஜ.,
சென்னை: தமிழக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு செயலர் வினோத் ராகவேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயர மரகத முருகன் சிலை திருடப்பட்டுள்ளது. கோவில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் அவலம் நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால், 2023ல் ஆஸ்திரேலியாவில் இருந்து, அரியலுார் ஆஞ்சநேயர் சிலை; 2026ல் பிரிட்டனில் இருந்து தாடிக்கொம்பு திருமங்கை ஆழ்வார் சிலை; அமெரிக்காவில் இருந்து சோமாஸ்கந்தர், நடராஜர் சிலைகள் என மீட்கப்பட்டன.





