இடஒக்கீட்டை பாதுகாக்க காங்கிரஸ் பிரசார இயக்கம் நாளை தொடக்கம்: மாணிக்கம் தாகூா்
69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வியாழக்கிழமை (செப்.17) காங்கிரஸ் சாா்பில் பிரசார இயக்கம் தொடங்க உள்ளதாக அதன் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகரில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸின் ஓபிசி பிரிவு சாா்பில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூா்த்தி பவனில் பிரசார இயக்கம் தொடங்கப்படுகிறது. திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி இதைத் தொடங்கி வைக்கிறாா். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மீா், செயலா் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
