திண்டிவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,மதிவாணன் தகவல்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்று விழுப்புரம் எஸ்.பி.,தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி.,மதிவாணன் நேற்று மாலை 6:30 மணியளவில், திண்டிவனம் நகர போலீஸ் ஸ்டேஷனில், ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
