தி.நகர் திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம் விமரிசை
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், நான்கு நாள் பவித்ர உத்சவ விழா, வெகு விமரிசையாக நடந்தது.
தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், நான்கு நாள் பவித்ர உத்சவ விழா, கடந்த 6ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது.
இறைவனின் சக்தி வாயிலாக விளையும் பலன்களை, பக்தர்களுக்கு அதிகரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில், இந்த பவித்ர உத்சவம் நடத்தப்படுகிறது.




