முறைகேடு செய்த அதிகாரி சஸ்பெண்ட் சரியே! வழிகாட்டுதல்களை பின்பற்ற மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
பெங்களூரு: கடவுள், பக்தர்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியற்காக, அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட உத்தரவை, ரத்து செய்ய கோரிய மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகாவில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவிலில், தகவல் தொழில்நுட்ப நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ராஜேஷ் நாயக். இவர், 2018 ஆக., 23 முதல், 25ம் தேதி வரை பணம் பெற்று, போலி ரசீதுகளை வழங்கியதால், ஹிந்து அறநிலைய துறை, அவரை 'சஸ்பெண்ட்' செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராஜேஷ் நாயக் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி கூறியதாவது:


