பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!
பரந்தூர் அருகே சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது பற்றி...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 8.38 ஹெக்டோ் நிலத்தைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் மேலாண்மை இயக்குநரால் நிா்வகிக்கப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும். தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997-இன் (சட்டம் 10/1999) பிரிவு 3(1)-இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


