சோனியாவின் சுயசரிதை: ஹாா்ப்பா் காலின்ஸ் நிறுவனம் நவ. 10-இல் வெளியிடுகிறது
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடவுள்ளதாக ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புத்தகத்தில், சோனியா காந்தி இத்தாலியில் இருந்தபோதான ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், 19-ஆவது வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பின் அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல, இந்திரா காந்தியிடம் முதல்முறை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிகழ்வு முதல், ஹிந்தி கற்க எடுத்த முயற்சிகள், சேலை அணியக் கற்றதும், இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி பிரதமரானது, ராஜீவ் படுகொலைக்குப் பின் சோனியா விருப்பமின்றி அரசியலுக்கு வந்தது என அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் இப்புத்தகத்தில் நினைவு கூறப்பட்டுள்ளன.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



