இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் சவுதியின் ‘அராம்கோ’ நிறுவனம் நிறுத்தியது
ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த, ‘அராம்கோ’ நிறுவனம், வினியோக இடர்பாடுகள் காரணமாக இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வினியோகத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா முக்கிய கச்சா எண்ணெய் வழங்குநராக உள்ள நிலையில், வளைகுடா பகுதியில் ஈரான் – அமெரிக்க படைகள் இடையே நடக்கும் மோதல் காரணமாக வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாயில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அந்த வழியில் நடக்கும் வினியோகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியான கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

