கேதார்நாத் உருவான கதை: மகாபாரதம் சொல்லும் நரநாராயணர் அவதாரம்!
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனும் நரநாராயணர்களே என்கின்றன புராணங்கள். மகாவிஷ்ணுவின் அம்சஸாவதாரங்களில் நரநாராயண அவதாரம் குறிப்பிடத்தக்கது என்கின்றன ஞானநூல்கள்.
நரநாராயண அவதாரச் சிறப்பை நாம் அறிவது அவசியம். நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம். நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
‘நர நாராயணன்’ என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். நாராயணன் என்கிற தெய்வத்திடமிருந்து எந்நாளும் பிரிக்கமுடியாத மனித சக்தியைக் குறிப்பதே நரநாராயண அம்சம் என்பார்கள் பெரியோர்கள்.


