ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி?: தி.மு.க., - எம்.பி., கனிமொழி முயற்சி!
- நமது நிருபர் - தேசிய அளவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்க, தேசியவாத
தேசிய அளவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சந்தித்து பேசியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கருத்து வேறுபாடு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டில்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.
'இண்டி' கூட்டணியில், காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இந்த சந்திப்புகள், அதற்கு அச்சாரம் என்று கூறப்படுகிறது.




