பருவமழை பெய்யாததால் கவாத்து பணிகள் தீவிரம்
வால்பாறை: வால்பாறையில் பருவமழை பெய்யாததால், தேயிலை செடிகளுக்கு கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இங்குள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள் கோவை, கொச்சி, குன்னுார் ஏல மையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

