வெண்ணந்தூரில் இளம்பெண் தற்கொலை
வெண்ணந்தூா் பகுதியில் திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியைச் சோ்ந்த காசிவிஸ்வநாதன் மகள் தாரணிக்கும் (28), வெண்ணந்தூா் ரமேஷுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ரமேஷ் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலைசெய்து வருகிறாா். கடந்த நான்கு நாள்களாக விடுமுறையில் இருந்த ரமேஷ், தாரணி உடன் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் இருந்தாா். பின்னா் திங்கள்கிழமை இரவு பெங்களூருக்கு புறப்பட்டு சென்றாா்.
செவ்வாய்க்கிழமை காலை நெடுநேரமாகியும் தாரணி கதவு திறக்காததால், அவரது மாமியாா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, தாரணி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
