கன்டெய்னர் லாரியில் வந்து ஏ.டி.எம் உடைப்பு... போலீஸுக்கே சவால்விடும் மேவாட் கொள்ளையர்கள்!
நெடுஞ்சாலையோர ஏ.டி.எம்-களைக் குறிவைப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இயந்திரத்தை உடைப்பது, அலாரத்தைச் செயலிழக்கச் செய்வது, சிசிடிவி-யில் பதிவாகாமல் தப்புவது என அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள்.
நெடுஞ்சாலையோர ஏ.டி.எம்-களைக் குறிவைப்பார்கள்... காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை அள்ளுவார்கள்... பின்னர் கன்டெய்னர் லாரியில் தப்பி, அதற்குள் கொண்டுவந்த காரில் சொந்த மாவட்டத்துக்கே சென்றுவிடுவார்கள். இதுதான் போலீஸாரால் ‘மேவாட் கொள்ளையர்கள்’ என அழைக்கப்படும் கும்பலின் பாணி. சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த மூன்று ஏ.டி.எம் கொள்ளைகளிலும் இதே பாணியைப் பின்பற்றிய கும்பலைத் தேடி, தாம்பரம் போலீஸாரின் தனிப்படை ஹரியானாவில் முகாமிட்டிருக்கிறது.
சிக்கிய மேவாட் கும்பலின் தடம்!



