பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., மனுதாக்கல்
திண்டுக்கல்: பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, விழுப்புரம் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் 56, நிலம் வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளைத்துரை 60, பழநி சேதுபதி 67, வழக்கறிஞர் அன்வர்தீன் 65, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, ஆகிய 6 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அன்வர்தீன் உடல்நலக்குறைவால் மதுரை சிறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு திண்டுக்கல் முதலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக.,19ல் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்து இருவரையும் அன்று மாலை 5:30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.




