குடிநீர் வாரிய லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
கோயம்பேடு: குடிநீர் வாரிய லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்ட மதின், 19, என்ற கல்லுாரி மாணவர், சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் மதின், 19. கோயம்பேடில் உள்ள செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர்.
இவர், தன்னுடன் பயிலும் சரண்ராஜ், கிருஷ்ணன் ஆகியோருடன், ‘கே.டி.எம்., டியூக்’ பைக்கில், திருமங்கலம் நோக்கி நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார்.


