ஒரு பதவிக்கு இத்தனை பேரா?
'நம் மாநிலத்தில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே...' என ஆச்சரியப்படுகின்றனர், பீஹார் மாநில மக்கள்.
பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சட்டசபை தேர்தல், 2030ல் தான் நடக்கவுள்ளது. அதற்குள்ளாகவே, 'அடுத்த முதல்வர் யார்' என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், 'அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்; நான் தான் முதல்வர்...' என்கிறார். பா.ஜ.,வினரோ, 'எங்கள் தலைவர் சாம்ராட் சவுத்ரி தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்...' என, அடித்துக் கூறுகின்றனர்.



