இடுப்பு எலும்பு பாதுகாப்பு வெளிநாட்டினருக்கு சிகிச்சை
சென்னை: அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த நோயாளிகளுக்கு, வடபழநியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில், ‘இடுப்பு எலும்பை பாதுகாக்கும்’ அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது:
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 44 வயது நபர், பிரிட்டனை சேர்ந்த 58 வயது ஆகியோர், இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டு வந்தனர். இரண்டு நோயாளிகளும், சிம்ஸ் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.




