உலக ‘கை மல்யுத்தம்’ போட்டியில் பங்கேற்க நிதி ஆதாரம் இன்றி மாற்றுத்திறனாளி தவிப்பு
பொன்னேரி, செப். 5– டெல்லியில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கை மல்யுத்தம் போட்டியில்
டெல்லியில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்பதற்கு, போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து வருவதாக, மாற்றுத்திறனாளி கை மல்யுத்த வீராங்கனை கவிதா வேதனை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் கவிதா, 39. மாற்றுத்திறனாளி. இவர் ‘ஆம் ரெஸ்லிங்’ எனப்படும் கை மல்யுத்த வீராங்கனை.
பல்வேறு கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றுள்ளார். கடந்த மே மாதம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில், குஜராத்தில் நடந்த தேசிய கை மல்யுத்த போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றார். அதை தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.


