சிறுநீரக நோய்களை கண்டறிய ஏ.ஐ., கருவி உருவாக்கம்
சென்னை: சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, செயற்கை நுண்ணறிவு எனும், 'ஏஐ' அடிப்படையிலான கருவியை, சென்னை ஐ.ஐ.டி., - வேலுார் சி.எம்.சி., இணைந்து உருவாக்கி உள்ளன.
சென்னை ஐ.ஐ.டி., - வேலுார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மதிப்பிடுவதற்கு, மருத்துவர்களுக்கு உதவிடும் வகையில், செயற்கை நுண்ணறிவு எனும் 'ஏஐ' அடிப்படையில் செயல்படும், மூன்று கருவிகளை உருவாக்கி உள்ளனர்.
முதலாவதாக, மருத்துவம் மற்றும் ஆய்வக தகவல்களை பயன்படுத்தி, நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை கணிக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு கருவி உருவாக்கப்பட்டு உள்ளது.


