அகலப்பாதையில் கூடுதல் ரயில்கள்: கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு
உடுமலை: 'மீட்டர்கேஜ்' தண்டவாள காலத்தில் மக்களுக்கு பயனளித்த ரயில் சேவைகளை, அகலப்பாதையிலும் மீண்டும் உடுமலை வழியாக இயக்க, விரைவில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் ரயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மோகன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
நிர்வாகிகள் பேசியதாவது: கோவை - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் வழித்தடம், கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையிலான முக்கியமான ரயில் இணைப்பாக உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப போதுமான ரயில் சேவைகள் இல்லாத நிலை தொடர்கிறது.



