தில்லியில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைமை நீதிபதிகளின் மாநாடு தொடக்கம்
தில்லியில் பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தில்லியில் வெள்ளிக்கிழமை பிரிக்ஸ் நாடுகளின் தலைமை நீதிபதிகள் மாநாட்டையொட்டி, ஈரான் தலைமை நீதிபதி கோலாம்ஹோசைன் மொஹ்சேனி ஈஜேவுடன் கலந்துரையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தற்போது இதன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மூத்த நீதித் துறை தலைவா்கள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.







