வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் 4 நாள் பயணம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள்கள் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்.6 முதல் செப்.9 வரை அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.








