10 ஆண்டுகளாக போராடும் 20 கிராம மக்கள்: மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்
அன்னுார்: மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுவதால், 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், தொழில் முனைவோரும் தவிக்கின்றனர்.
அன்னுாருக்கு வடக்கே, வடக்கலுார், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு, தற்போது மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள பெத்திக்குட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகிக்கப்படுகிறது. அதிக தொலைவு என்பதாலும், அதிக பகுதிகளை உள்ளடக்கியதாலும் மும்முனை மின்சாரம், மூன்று மணி நேரம் மட்டுமே வினியோகிப்பதால், இந்த ஊராட்சிகளை சேர்ந்த, 20 கிராம மக்கள் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மயில்சாமி கூறியதாவது:

