குழந்தைகளிடையே பரவுகிறது கை, பாதம், வாய் நோய் பாதிப்பு
சென்னை: 'தமிழகத்தில், கை, பாதம், வாய் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிக்கப்படும் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்' என, பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற நோயால் ஏற்படும் பாதிப்பு, தமிழகத்தில், 'கை, பாதம், வாய் நோய்' என்பதாக உள்ளது. இந்த பாதிப்பு, தற்போது குழந்தைகளிடையே அதிகம் பரவி வருகிறது.
முதலில் காய்ச்சல் ஏற்பட்டு, பின் தொண்டையில், புண், கை, கால்கள், பாதங்களில் கொப்பளங்கள் மற்றும் அரிப்புடன், சிவப்பு நிறத்தில் மாறும்.



