அரசு மருத்துவமனையில் 38 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கும் திட்ட பணிகள் கிடப்பில் போட்ட த.வெ.க., அரசு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தீக்காயம் சிகிச்சைக்கு 38 படுக்கைகளுடன் தனி பிரிவு துவங்க கடந்தாண்டு திட்ட பணிகள் நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் தீக்காயமடைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பட்டாசு தயாரிப்பு பணிகள் துவங்கி முடிவடைவதற்குள் பல விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
