கூட்டுறவு சங்கங்களின் இருப்பு சேலைகளை தமிழக அரசு உடனடி கொள்முதல் செய்ய வேண்டும் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பேட்டி
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் இருப்பில் உள்ள சேலைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை, தேக்கமடைந்த சேலைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தெரிவித்தார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு புதிய ரக சேலைகளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், புதிய ரக சேலைகளை நெய்வதற்கு தறிகளை புதுப்பிக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு தறியை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் செலவாகும் இதனை நெசவாளர்கள் சொந்தமாக செய்ய வேண்டியுள்ளது.
