கட்சி பொறுப்புக்கு ரூ.15 லட்சம் பேரம்
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் த.வெ.க.,வில் நகர் பொருளாளர் பதவி வாங்கிதர ரூ. 15 லட்சம் வரை நிர்வாகிகள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சாயல்குடியில் வணிகர் சங்க மாநிலதுணை தலைவர் பெத்தராஜ் கூறியதாவது:
எனது உறவினருக்கு த.வெ.க., நகர பொருளாளர் பதவி வாங்கி தருவதாக ஒன்றிய நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் மதனிடம் அழைத்து சென்றார். அங்கு வைத்து ரூ.15 லட்சம், அதன்பிறகு ரூ. 5 லட்சம் என பேரம் பேசியதால் பதவி வேண்டாம் என திரும்பி வந்து விட்டோம்.
